ஞானம் பிறந்த கதை
சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த
இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து
சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார்.
பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம்
திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி
அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை
என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில்
திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர்,
கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக்
கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்
பட்டினத்தார் . அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம்
சென்று வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக்
கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத்
துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ
சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ர ஊசியும் வாராது காண்
கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.
பட்டினத்தடிகள்
அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன்
துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம்
குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க
முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி
விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு
பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும்
மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்
சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகல் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.
என் பெற்றதாயரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன் பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடமுடைத்தார்
தான் பற்று ஒழிய ஒரு பற்று மில்லை உடையவனே.
“அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே
விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே; விம்மி
விம்மியிரு
கைத்தலைமேல் வைத்துஅழும் மைந்தரும்
சுடிகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய
பாவமுமே!'
அன்னையின் ஈமச் சடங்கு
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய
அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து
தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை
அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த
விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி
பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப்
புகழ்பெற்றவை.
-
-
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
-
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
-
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
-
எப்பிறப்பில் காண்பேன் இனி
-
-
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
-
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
-
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
-
எரியத் தழல் மூட்டுவேன்
-
-
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
-
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
-
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
-
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
-
-
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
-
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
-
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
-
மெய்யிலே தீமூட்டு வேன்
-
-
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
-
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
-
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
-
மானே எனஅழைத்த வாய்க்கு
-
-
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
-
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
-
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
-
மகனே எனஅழைத்த வாய்க்கு
-
-
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
-
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
-
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
-
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
-
-
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
-
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
-
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
-
கருதி வளர்த்தெடுத்த கை
-
-
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
-
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
-
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
-
தன்னையே ஈன்றெடுத்த தாய்
-
-
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
-
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
-
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
-
எல்லாம் சிவமயமே யாம்
பத்திரகிரியார் தொடர்பு
பத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது
செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் ஞானம்
பெற்ற பத்திரகிரி மன்னன் தன் சொத்துக்களைத் துறந்து இவருடைய சீடரானார். பதினெண்
சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் "மெய்ஞானப்
புலம்பல்" என்று பெயர் பெற்றவை.
பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள்
சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள்,
திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய
பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில்
உள்ளன. அவையாவன:
- கோயில் நான்மணி மாலை
- திருக்கழுமலை முமணிக்கோவை
- திருவிடைமருதூர் திருவந்தாதி
- திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக்
கலவை ஆகும்.
எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:
-
-
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
-
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
-
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
-
தம்மதென்று தாமிருக்கும் தாம்
-
-
மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
-
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
-
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
-
பித்தானால் என்செய்வாள் பின்
-
-
உண்டென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
-
அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
-
நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
-
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே
-
-
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
-
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
-
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
-
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
-
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
-
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
-
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
-
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே
திருவொற்றியூரில் சமாதி
தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே
கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து
மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும்
இருந்ததாகக் கூறப்படுகிறது