தியானம்.காம்

 

Real Estate | Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                World News          Home            Data Entry           Skills          Insurance       Real Estate      contact Us   

 

Font Problem.. Help..

 

 

 

 

 

வாரிசை களம் இறக்கும் பங்காரு அடிகளார்!

Posted by வசந்தசேனன்

பங்காரு அடிகளார் தற்பொது தமிழகத்தில் "அம்மா" என பரவலாக அழைக்கபடும் ஐந்து நாள் லேசான தாடியொடு இருப்பவர்.. மேல்மருவத்தூர் சென்றால் அந்த ஊரையே வளைத்து போட்டு ஆ(ட்)சி செய்பவர்.. ஒரு காலத்தில் அருள்வாக்கில் ரம்பித்து தற்போது ஆதிபராசக்தி ட்ரஷ்ட் என்று ஒன்றை நிறுவி கிட்டதட்ட பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நிர்வகித்து வருகிறது இவர் குடும்பம்.. ஆனால் நமக்கு இவர் நடத்தும் கல்லூரிகளில் தாவது ழை மாணவர்கள் படிக்கிறார்களா என பார்தோமானால் அதனை பற்றிய செய்திகள் மிகக் குறைவு..
பல ஏக்கர் நிலங்களை வளைத்து போட்டு உள்ள அவருக்கு கண்டிப்பாக வந்த பணம் அம்மன் பெயரை சொல்லி வசூலித்த உண்டியல் காசு தான்.. இவர் நடத்தும் கல்லூரிகள்

 

Adhiparasakthi Polytechnic 
Adhiparasakthi Matriculation Higher Secondary School 
Adhiparasakthi Engineering College
Adhiparasakthi College of Physiotherapy 
Adhiparasakthi College of Pharmacy
Adhiparasakthi College of Nursing 
Adhiparasakthi College of Science 
Adhiparasakthi Agriculture College 

இப்படி பல கல்லூரிகளை நிர்வகித்து வரும் இவர் குடும்பத்தார் இன்று பற்பல கோடிகளுக்கு அதிபதிகள் என்றால் மிகையாகாது.. சரி விஷயத்துக்கு வருவோம்.

1966 அம்மன் அருள் வந்து சுயம்பாக இரு-ந்த வேப்பமரத்தில் இருந்து இவர் வரலாறு ரம்பிக்கிறது.. இந்த ஆதிபராசக்தி பீடத்திற்க்கு இன்று உலகெங்கும் பல கிளைகள் உள்ளன .. இப்பொது இவர்கள் முழுவதும் நல்லது செய்கிறார்களா அல்லது சொத்தை சேர்த்து வைத்து உள்ளனரா என்பது பெரிய கேள்வி.. இன்று தமிழகம் முதல் ஈழம் வரை உலகின் பல நாடுகளிலும் கிளை பரப்பி உள்ள இந்த அம்மா பக்தர் சபை பக்தி மயக்கத்தில் இவருக்கு செய்யும் பணிவிடைகள் அதி தீவீரம்

அம்மா பங்காருவின் காலை கழுவ சுமார் ஐந்து முதல் பத்து ஆயிரம் வரை நன்கொடை அளிக்க வேண்டும்.. இவர் காலை கழுவ இந்த மனிதர் ஒவ்வொரு ஊரின் சக்தி பீடத்துக்கு விசிட் செய்யும் பொது அந்த ஊர்களின் பெரும் புள்ளிகள் முதல் பலரும் இவ்வாரு பணத்தை கட்டி பால் குடத்துடன் இவர் காலை கழுவ வரிசையில் நிற்கின்னர்.. இவர் ஒரு சமயம் எனது சொந்த ஊருக்கு வருகையில் எனது உறவினர் ஒருவர் இவ்வாரு காலை கழுவி தீர்த்தம் என குடித்தார்.. 
அதே போல் இன்று சபரி மலைக்கு மாலை அணிவதை போல் பெண்கள் பலர் மேல்மருவத்தூருக்கு மாலை அணிவிக்கின்றனர்.. இவர் ஒரு புரட்சி செய்துள்ளார் அதாவது கருவரையில் உள்ள சாமியை பெண்களும் பூஜிக்கலாம்.. ஆனால் கோயில் பிகாரத்தை சுற்றி இவர் அரசியல் தலைவர்கள் பலருடன் சேர்ந்து எடுத்த போட்டக்கள் இருக்கும்.. இங்கு தான் சூட்சமம் இருக்கிது.. கிராமங்களில் இருந்து வரும் பெண்கள் இந்த போட்டொவை பார்த்து சாமி பெரிய சக்தி வாய்ந்தவர் பல தலைவர்களும் இவர் சீடர்கள் என வியந்து அதி தீவிர பக்தர்கள் ஆகி விடுகின்றனர் ..

எது எப்படியோ அடித்த வரை கொள்ளை என பல கோடிகளுக்கு அதிபதியான இவர் இப்பெரும் பணத்தை காக்க தற்பொது அவர் வாரிசான மகனை அம்மாவின் அருள் செம்மல் என முத்திரையொடு களம் இறக்கி உள்ளார்.. அரசியல்வாதிகள் தான் கலைஞர் முதல் குடிதாங்கி வரை தங்கள் வாரிசை இறக்கி கட்சியையும், சொத்தையும் காக்கிறார்கள் என்றால் இன்று ஆன்மீக தொழிலும் தத்தம் வாரிசை களம் இறக்கி உலக பக்தர்களின் பக்தியை பதம் பார்க்க கிளம்பி விட்டார்கள்..
இந்த சின்ன 'அம்மாவின்' காலையும் கழுவி குடிக்க இனி தமிழக பக்தர்கள் மீண்டும் பணம் கட்டி வரிசையில் நிற்பர்..