|
மிளகு எனும் அற்புத நிவாரணி
நறுமனப் பொருள்களின் அரசன் என்ற போற்றப்படும் மிளகு உடலுக்கு
நல்லதா?
உடல் நலத்துக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் நல்லது! மிளகில் சோர்வு அகற்றி
இடையறாத ஊக்கம் தருகிற நறுஞ்சுவையும், நறுமணமும் உள்ள பொருட்கள் நீக்கமற
நிறைந்துள்ளன.
100 கிராம் கறுப்பு மளிகல் புரதம் 11.2% கொழுப்பு 6.8% என்று உள்ளது. இதில் 300
கலோரி கிடைக்கிறது.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு
இணையானது. குழந்தைகள் மட்டுமல்ல, வாழ்வில் முன்சூனற முயற்சிப்பவர்களுக்குத்
தேவையான சக்தியையும் வழங்கும். அதற்கு ஏற்ப கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற
தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற
வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி
நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால்
சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள்
அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான
மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது.
உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும்,
நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து
குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து
அரைத்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன்
சாப்பிடவும். கூடவே மைசூர் பாக், பாதுஷா போன்ற வகைகளில் ஆறு துண்டுகள்
சாப்பிடவும்.
இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.
தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில்
கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று
நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
சோம்பலாகவும், அறவு மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற
வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து
காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை
விழிப்புடன் வைத்திருக்கும்.
உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், லைட்டுத்தன்மையுள்ளவர்களும் மிளகை தினசரி
உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு
பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது
நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில
நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப்
பல்துலக்கி வரவும்.
மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின்
கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
மிளகின் மருத்துவ குணங்கள்:
*
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது
* உடலின் கொழுப்பு மற்றும் சோடியம் அளவை குறைக்க உதவுகிறது.
* கால்சியம், மாக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் கே, இரும்புசத்து, செப்பு
மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.
* கடும் வயிற்று வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
* பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் வாய்ந்தது.
* ஆயுர்வேத மருத்துவ முறையில், ஜீரணத்திற்கு மிளகு பயன்படுத்தப்படுகிறது.
இருமல், ஜலதோஷம், சுவாசப் பிரச்னைகள், ரத்த சோகை போன்றவற்றிற்கான
சிகிச்சையிலும் மிளகு பயன்படுத்தப்படுகிறது.
* பருக்கள், தோல் பிரச்னைகள் மற்றும் கூந்தல் உதிர்வு போன்றவற்றை தீர்க்க
உதவுகிறது.
* நாள்பட்ட நெஞ்சு சளியை நீக்க பசும்பாலில் மிளகுபவுடர் மற்றும் சிறிது
மஞ்சள் கலந்து காலை மாலை குடித்துவர வேண்டும். நான்கு அல்லது ஐந்தே நாட்களில்
நெஞ்சு சளி நீங்கிவிடும்.
இத்தகு சிறப்பு வாய்ந்த மிளகு, இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில்
தான் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அதிலும், கேரளாவில் தான் 90 சதவீதம் மிளகு
உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர, ஆந்திரா, தமிழகம், அந்தமான் போன்ற
பகுதிகளிலும், சிறிதளவு பயிரிடப்படுகிறது. மிளகு விளைச்சலுக்கு, நீண்ட மழைப்
பொழிவு, சீரான உயர் வெப்பம் மற்றும் பகுதி நிழல் போன்றவை அவசியம்.
பரவி வரும் பன்றிக்
காய்ச்சலைத் தடுக்க, துளசி இலையுடன், மிளகு சேர்த்து, இரண்டு வேளை மென்று
சாப்பிட்டால், காய்ச்சல் பயந்து ஓடும்
|
|