Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

பார்ப்பனர்களின் காமாந்தகாரச் சிந்தனையால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட அவமானம்.

ARTICLE BY : தஞ்சை நாராயணசாமி. IN VIDUTHALAI.COM
 

 
    
பார்ப்பனர்கள் காமக் கிறுக்கர்கள். அவர்கள் கலாச்சாரமே காமம் நிறைந்தது.

அவர்களின் அந்த நிலைமை நமது `திராவிடர்கள்மீது திணித்து, அவற்றைக் கடைப் பிடிக்கச் செய்து, மானமும் அறிவும் அற்றவர்களாகச் செய்து விட்டனர்.

அதை நம்மவர்கள் பலரும் உணராமலும், அறிந்தாலும் மான உணர்வு கொண்டு அவற்றை ஒழிக்காமலும், இயந்திர வாழ்க்கை நடத்துகிறார்கள்.

1) திருநீறு: பார்ப்பான் ஆடு மாடுகள் ஓட்டிக் கொண்டு, பிழைப்புத் தேடி நம் நாட்டுக்கு வந்தவர்கள். அவர்களின் விலங்கான மாட்டின் சாணியையே, நம்மவர்களை பயன்படுத்தப் பழக்கி விட்டார்கள்.

சைவ நெறி பேசிய சமயக் குரவர்களும் அந்தச் சாணியின் பெருமையைப் பற்றிப் பாடி, நம்மக்களை மாறா நிலைக்கு பக்குவப்படுத்தி விட்டனர்.

கோவில்களில் கடவுளரின் சிலைகளுக்கே இட்டுள்ளனர். (திருநீரைக் குழைத்து நெற்றி, மார்பு, புஜம் முழங்கை, மணிக்கட்டு, வயிறு முழங்கால் மற்றும் பல பொருள்கள்மீதும் பூசவும், அதை வாயில் போட்டுச் சுவைக்கவும், பலர் தண்ணீரில் கலந்து குடிக்கவும் ஆன நிலை ஏற்பட்டுவிட்டது.
(இது மனிதனின் தன்மானத்துக்கு ஏற்பட்ட இழுக்காகும்)

2. நாமம்: இரு வெள்ளைக் கோடுகள் நடுவில் ஒரு சிகப்புக் கோடு கொண்டது.

வெள்ளைக் கோடு விஷ்ணு என்ற கடவுளின் இரு தொடைகளையும், சிகப்புக் கோடு சிருஷ்டி தத்துவத்தைக் (தொடைகள் இரண்டுக்கும் நடுவில் தொங்கும் ஆண்குறி) குறிக்கும்.

இரண்டு கோடுகளும் சுக்கிலம், சுரோணிதம் ஆகியவற்றைக் குறிக்கிறது. (இந்த சின்னத்தை நெற்றி மற்றும் உடல் முழுவதும் வரைந்து கொள்ளவும், வைணவக் கூட்டத்தார் எங்கும் இதைப் பயன்படுத்தவும் செய்திருப்பது அவமானதாகும். பார்ப்பனர்கள் பெருமை பெற, நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாது என்ற துணிவில், இந்தச் சின்னம் விஷ்ணு கடவுளின் நெற்றியிலேயே, இட்டு இழிவுபடுத்தத் தயங்க வில்லை).

3. பிள்ளையார் சுழி: உ. டி சக்தி வடிவமாகிய வட்டம் பெண் குறியைக் குறிக்கிறது. குண்டலினி சக்தி, சக்திபீடம் என அது சொல்லப்படுகிறது. -

லிங்க வடிவம் தண்டாயுதம் சிவ சின்னம் என்று சொல்லப்படுகிறதுத.

லிங்கமும், குண்டலினி சக்தியாகிய டி பெண் குறியும் ஒன்று சேருகிறது. இதை ஊமை எழுத்து, மவுனாக்ஷரம் எனப்படுகிறது. (சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் பக்கம் 201,202) (இதுகுறித்து அறியாமல் தொடங்கும் எல்லாப் பணிகளுக்கும், எழுத்துகளுக்கும் நம் மக்கள் பிள்ளையார் சுழியைப் பயன்படுத்தப் பழகி விட்டார்கள்).

4. ஓம்: ஓம் கார் என்னும் அடையாளம் பெண் குறி ஆண் குறி யோனியும் (பெண் குறி) லிங்கமும் (ஆண்குறி) கலந்து இருபாலரின் அமைப்பே ஓம்.

(ஓம் சக்தி என்றும், ஓம் சாந்தி என்றும், கோவில் தோறும் ஓம் என்று எழுதியும், அதுவே தகப்பன்சாமி சிவனுக்குச் சொல்லிக் கொடுத்தது என்றும் நம்புகிறவர்கள்)

5. ஸ்வஸ்திகா: யோகம், போகம் இரண்டும் உருகிக் கலக்கும் உச்சக்கட்ட நிலையை அடையாளப்படுத்துவது. இதைப் பல கணவர் உடமை என்னும் மரபினை அடிப்படையாகக் கொண்டது என்று திபெத், நேபாளம், பூட்டான், சிக்கிம் இன்னும் சில இந்திய மாநிலங்களில் நம்புகிறார்கள்.
(இதை நம் நாட்டில் ஆண்ட ஆரிய அரசர்களும், சில சார்பு ஆட்சியாளர்களும் கடைப்பிடித்ததாக அறிகிறோம். ஜெர்மனியை ஆண்ட அடால்ஃப் ஹிட்லர் இந்தச் சின்னத்தையே பயன்படுத் தினார்)

6. மந்திரம்: `ஓம் மணி யத்மே ஹம்’ லிங்கத்தைச் சுட்டுவது மணி (ஆண் குறி) பத்மே என்றால் புனித யோனியில் (பெண் குறி) ஹம் மிக உயர்ந்த சக்தியின் ஆதார மந்திரம். (4,5,6 தந்திரா - காமம் சார்ந்த வழிபாடு கோல்டன் எஃப்டி கொலபவாலா எழுதியது. Tantra te erote cult என்னும் நூல்)

7. திலகம் (பொட்டு): பெண்கள் விலக்காகும் மூன்று நாள்கள் குளிப்பு, பொட்டு, சடை போன்றவை இல்லாமல், நான்காவது நாள் குளித்து அவர்களின் கழிவினை ( மாத விடாயை ) நெற்றியில் இட்டுக் கொண்டால், மங்களம் உண்டாகும் எனப்படுகிறது.

சிவன் ஆடும்போது தலையில் உள்ள கங்கையின் மாத விலக்கு நெற்றியில் வழிய, கண்ணுக்கு வராமல் நிறுத்தியதே ஆண்களின் பொட்டு எனப்படுகிறது (திலக புராணம்)

தற்போது ஆண்கள் சந்தனம், குங்குமம் இணைந்தும், சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்வதும், பெண்கள் பல நிறப் பொட்டுகள் அணிந்தாலும் மக்களை இழிவு படுத்தவே இது பழக்கப்பட்டுள்ளது. பலருக்கு குங்குமம் இட்டுக் கொண்டு தோலில் கறுப்பாக ஒரு தழும்பும் காணப்படுகிறது.

மேற்கண்ட பார்ப்பனர்களின் தந்திர நடைமுறைகளை ஒழித்து நம் மக்கள் மானமும் அறிவும் பெற வேண்டும்.
Thanks to :
ARTICLE BY : தஞ்சை நாராயணசாமி. IN VIDUTHALAI.COM.